1) பல பெண்கள் திருமணம் முடிந்த உடனே ஒரு ஆர்வ கோளாறில் மாமியாரை என் தாயை போல நினைத்து கொள்வேன் . தாயுடன் இருப்பது போல நடந்து கொள்வேன் என்று சொல்வார்கள் . இது தவறான அணுகுமுறை ! ஒரு கடினமான விஷயம் என்னவென்றால் உங்கள் தாயிடம் உள்ள unconditional love மாமியாருடன் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் தான் முடியும் . மாமியார் கணவனின் தாய் என்ற இடைவெளியும் மரியாதையும் மிக முக்கியம்.
2)எக்காரணத்தை கொண்டும் ஒருவரின் தாயை பற்றி அவர் மகனிடம் தவறாக பேச வேண்டாம் .
3) மாமியாரின் மனநிலையை புரிந்து கொள்வது அவசியம் . எங்கு தன் குழந்தை தன்னை விட்டு போய் விடுவானோ என்றும் எங்கே தன் ஆதிக்கம் இல்லாமல் போய் விடுமோ என்ற பயமுமே மாமியார்களின் நடவடிக்கைகளுக்கு பின்னால் அமையும் . இதை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக பெண்களால் செயல்பட முடியும்.
4) நம் நாட்டில் சமூக அமைப்புகள் குறைவு என்பதால் தாயும் தந்தையும் குழந்தைகளின் கடமை என்பதை மறந்து விட வேண்டாம்.
5) எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவான பேச்சையோ அல்லது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளில் தலையிடுவதையோ அனுமதிக்க வேண்டாம்.
6) எவ்வளவு கோபம் வந்தாலுமே மரியாதையை குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் . இதற்கு முதலில் நீங்கள் உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ள வேண்டும் . இதற்கு mindfulness போன்ற பயிற்சிகள் உதவும்.
7) The communication must always be in the assertive mode. Not gravitating towards passiveness or aggressiveness.
8)கூடவே வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட மாமியாரும் உங்கள் பொறுப்பு தான் என்பதை உணர்ந்து எப்படி இடைவெளியுடன் உங்கள் கடமைகளை செய்ய முடியும் என்று கவனித்து பாருங்கள்.
இந்த குறிப்புகளை மனதில் கொண்டு செயல்பட்டால் மாமியார் பிரச்னையை எளிதில் கையாள முடியும். Best wishes